செய்திகள்

புதிய தலைமை தேர்தல் ஆணையராகிறார் ஓம் பிரகாஷ் ராவத்

Published On 2018-01-19 15:08 GMT   |   Update On 2018-01-19 15:08 GMT
இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கிறார். #Electioncommission #OmPrakashRawat

புதுடெல்லி:

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் அடுத்த வாரம் பொறுப்பேற்கிறார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக அச்சல் குமார் ஜோதி பதவி வகிக்கிறார். 2017-ம் ஆண்டு, ஜூலை 7-ம் தேதி இவர் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகிற 22-ம் தேதி நிறைவடைகிறது.

இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த வாரம் ஓம் பிரகாஷ் தலைமை தேர்தல் ஆணையராக பொறப்பேற்றுக்கொள்வார். ஓம் பிரகாஷ் ராவத் 22வது தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார். #Electioncommission #OmPrakashRawat #tamilnews
Tags:    

Similar News