செய்திகள்

9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 53 வயது வழக்கறிஞர் கைது

Published On 2017-12-22 09:55 GMT   |   Update On 2017-12-22 09:55 GMT
மும்பையைச் சேர்ந்த 53 வயது வழக்கறிஞர் ஒருவர் 9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை:

மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த 2014-ம் ஆண்டு தனது மனைவி காலமானதையடுத்து, 9-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். தற்போது 17 வயதாகும் அந்தப் பெண் கடந்த 13-ம்தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், பள்ளிப்படிப்பை முடிக்கும் கனவுகளோடு இருந்த தன்னை கட்டாயப்படுத்தி வயது முதிர்ந்த வழக்கறிஞருக்கு 2014-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும், அவர் தன்னை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவருதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் அடிப்படையில் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் (போக்சோ) கைது செய்யப்பட்ட அந்த வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதவிர சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த அவரது தாத்தா, பாட்டி ஆகியோரையும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய வழக்கறிஞருக்கு ஏற்கனவே 15 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News