செய்திகள்

அசாம்: ரெயில் மூலம் கடத்தப்பட்ட ரூ.6 கோடி தங்கம் பிடிபட்டது

Published On 2017-12-11 14:31 GMT   |   Update On 2017-12-11 14:31 GMT
கொல்கத்தா செல்லும் ரெயிலில் 19 கிலோ தங்கத்தை கடத்தி சென்ற 4 பேரை ரெயில்வே போலீசார் இன்று கைது செய்தனர்.
கவுகாத்தி:

கொல்கத்தா செல்லும் ரெயிலில் 19 கிலோ தங்கத்தை கடத்தி சென்ற 4 பேரை ரெயில்வே போலீசார் இன்று கைது செய்தனர்.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து இன்று கொல்கத்தா நகருக்கு புறப்பட்டு சென்ற ரெயிலில் இருந்த பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்த ரெயில்வே போலீசார் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 4 பேரின் பெட்டிகளை ஆய்வு செய்தபோது 19 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த ரெயில்வே போலீசார் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News