செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: குப்வாராவில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

Published On 2017-11-22 11:38 GMT   |   Update On 2017-11-22 11:38 GMT
ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து அங்கிருந்த தீவிரவாதிகளை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த என்கவுண்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:    

Similar News