செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேர் கைது
ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேரை கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேரை கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், பிஸ்டல் மற்றும் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் 3 பேரை கைது செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த மூன்று தீவிரவாதிகளை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், பிஸ்டல் மற்றும் வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.