செய்திகள்
உ.பி: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து - பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டதில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின்சார நிலையம் உள்ளது. இன்று பிற்பகலில், இந்த ஆலையில் உள்ள கொதிகலன் ஒன்று திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும், 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதற்கிடையே, பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய அனல் மின்சார நிலையம் உள்ளது. இன்று பிற்பகலில், இந்த ஆலையில் உள்ள கொதிகலன் ஒன்று திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும், 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதற்கிடையே, பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவித்துள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.