செய்திகள்
உ.பி: தடுப்புச்சுவரை தாண்டி லாரி மீது பாய்ந்த கார் - 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் இன்று காலை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள பச்சாவராவன் பகுதியில் அருகே இன்று காலை விந்தயாசல் நோக்கி சென்று கொண்டிருந்த காரானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை தாண்டி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரானது தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 6 பேர் உடல்நசுங்கி பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள பச்சாவராவன் பகுதியில் அருகே இன்று காலை விந்தயாசல் நோக்கி சென்று கொண்டிருந்த காரானது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை தாண்டி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரானது தூக்கி வீசப்பட்டது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 6 பேர் உடல்நசுங்கி பலியாகினர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் சடலங்களை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.