செய்திகள்

டெல்லி: காணமல் போன நபரின் உடல் துண்டு துண்டாக ஃப்ரிட்ஜில் கண்டெடுப்பு

Published On 2017-10-15 01:59 GMT   |   Update On 2017-10-15 01:59 GMT
தலைநகர் டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக காணமல் போன நபரின் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் அவரது நண்பரின் வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

தெற்கு டெல்லியில் உள்ள சைதுலாஜாப் பகுதியில் வசிக்கும் விபின் ஜோஸி (26) என்பவர் அங்குள்ள தனியார் பார் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரை கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என அவரது உறவினர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதனையடுத்து, அவரது நண்பர் வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, விபின் ஜோஸியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அங்குள்ள ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். பின்னர், வெட்டப்பட்ட உடல் பாகங்களை கைப்பற்றி பரிசோதனக்காக அனுப்பிவைத்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபின் ஜோஸியுடன் நண்பர்தான் அவரை கொன்று விட்டு தப்பி ஓடியுள்ளதாக ஜோஸியின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் அடிப்படையில், அந்த நபரை கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News