செய்திகள்
ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் பாக். படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் காயம்
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலாகோட் பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று மாலை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அதே பகுதியை சேர்ந்த மூன்று குழந்தைகள் காயம் அடைந்தனர். பாதுகாப்பு படையினர் காயமடைந்த குழந்தைகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பாகிஸ்தான் படையினர் இந்திய எல்லையை தாண்டி தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.