செய்திகள்

ஜனாதிபதி-துணை ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

Published On 2017-10-09 10:51 GMT   |   Update On 2017-10-09 11:12 GMT
டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி:

அசாம் மாநில கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித்தை தமிழக கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கடந்த மாதம் 30-ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் 6-ம் தேதி பதவி ஏற்றார். அப்போது கவர்னரை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

இந்நிலையில் கவர்னராகப் பதவியேற்ற பின்னர் பன்வாரிலால் புரோகித் முதல் முறையாக நேற்று டெல்லி சென்றுள்ளார். சென்னையில் இருந்து நேற்று டெல்லி சென்ற அவர், இன்று ஜனாதிபித ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர் ஜனாதிபதியுடன் விவாதித்ததாக தெரிகிறது. இதேபோல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவையும் கவர்னர் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண்ஜெட்லி உள்ளிட்டோரையும் சந்தித்து பேசுகிறார்.

ஜனாதிபதி மாளிகையில் 12, 13-ந்தேதிகளில் நடைபெறும் கவர்னர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். அதன்பின்னர் சென்னை திரும்புவார் என ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News