செய்திகள்
அசாம்: படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி
அசாம் மாநிலத்தில் படகு பந்தயத்தை பார்க்க சென்றவர்களின் படகுகள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்துக்குட்பட்ட சபோன் ஆற்றில் நேற்று படகு பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை பார்க்க சென்றவர்கள் சுமார் 50 பேர் 4 படகுகளில் நேற்று மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, வீசிய பலத்த காற்றால் நிலைதடுமாறிய படகுகள் ஆற்றில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் சிறுவர், சிறுமியர் உள்பட பத்துபேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்துக்குட்பட்ட சபோன் ஆற்றில் நேற்று படகு பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை பார்க்க சென்றவர்கள் சுமார் 50 பேர் 4 படகுகளில் நேற்று மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, வீசிய பலத்த காற்றால் நிலைதடுமாறிய படகுகள் ஆற்றில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் சிறுவர், சிறுமியர் உள்பட பத்துபேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.