செய்திகள்

அசாம்: படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலி

Published On 2017-09-18 07:45 GMT   |   Update On 2017-09-18 07:45 GMT
அசாம் மாநிலத்தில் படகு பந்தயத்தை பார்க்க சென்றவர்களின் படகுகள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்துக்குட்பட்ட சபோன் ஆற்றில் நேற்று படகு பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை பார்க்க சென்றவர்கள் சுமார் 50 பேர் 4 படகுகளில் நேற்று மாலை வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, வீசிய பலத்த காற்றால் நிலைதடுமாறிய படகுகள் ஆற்றில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் சிறுவர், சிறுமியர் உள்பட பத்துபேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Tags:    

Similar News