செய்திகள்

கோயிலுக்குள் தூங்கிய சாத்வியை கற்பழித்த கும்பல்: உ.பி.யில் கொடூரம்

Published On 2017-09-15 10:34 GMT   |   Update On 2017-09-15 10:35 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கோயிலுக்குள் தூங்கிய பெண் சாமியாரை காவலாளி உட்பட சிலர் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா மாவட்டத்துக்கு உட்பட்ட பர்சானா பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஜி கோவில் உள்ளது. இந்த கோயிலில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க சாத்வி (பெண் சாமியார்) தங்கி இருந்தார். கடந்த 11-ம் தேதி இரவு கோவிலின் உட்பகுதியில் அந்த சாத்வி உறங்கிக் கொண்டிருந்தபோது, அதே கோவிலில் காவலாளியாக பணியாற்றும் நபர் வேறு சிலருடன் அந்த சாத்வியை மிரட்டி, அருகாமையில் உள்ள தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை மாறி,மாறி கற்பழித்த பின்னர் பிரமை பிடித்த நிலைக்குள்ளான அந்த பெண் சாமியார், இதுதொடர்பாக கடந்த 13-ம் தேதி மாலை போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்யாத போலீசாரின் பாராமுகம் தொடர்பாக உள்ளூர் ஊடகங்களில் தகவல் வெளியானது.


இதையடுத்து, நேற்று வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த சாத்வியை கற்பழித்த கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News