செய்திகள்

இமாச்சல்: பள்ளத்தாக்கில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

Published On 2017-08-15 21:59 GMT   |   Update On 2017-08-15 21:59 GMT
இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிம்லா:

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் ஆழமான பள்ளத்தாக்கில் அரசுப்பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இமாச்சலப்பிரதேசம் மாநிலம் சிம்லா அருகே அன்னி - ஜலோரி சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மஷ்னு என்ற இடத்தின் அருகே வரும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் பக்கவாட்டிலிருந்த ஆழமான பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்தது.

பேருந்து விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் பேருந்திலிருந்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்த 12 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News