செய்திகள்

போலீசுக்கு உளவு சொன்னதால் பஞ்சாயத்து தலைவரை வெட்டி கொன்ற நக்சலைட்டுகள்

Published On 2017-08-09 05:57 GMT   |   Update On 2017-08-09 05:57 GMT
விசாகப்பட்டினத்தில் போலீசுக்கு உளவு சொன்னதால் பஞ்சாயத்து தலைவரை கடத்தி சென்று நக்சலைட்டுகள் கோடாரியால் வெட்டி கொன்றனர்.
நகரி:

விசாகப்பட்டினம் அடுத்த அரத்தலோயா பகுதியில் உள்ள அத்திபரி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் ஜெகன்நாத்கோரா. இப்பகுதி ஒடிசா மாநில எல்லையில் உள்ளது. இங்கு நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

இந்த நிலையில் நள்ளிரவில் 60-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கிராமத்துக்குள் புகுந்து ஜெகன்நாத் கோராவை கடத்தி சென்றனர். பின்னர் அவரை கோடாரியால் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

அவர் போலீசுக்கு உளவு சொன்னதாலும் மக்களின் சொத்துக்களை அபகரித்ததாலும் கொலை செய்து உள்ளோம் என்று எழுதப்பட்ட துண்டு பிரசுரங்களை வீசி விட்டு தப்பி சென்றனர்.
Tags:    

Similar News