செய்திகள்
டெல்லி: லாட்ஜில் மருத்துவ மாணவி காதலனுடன் தூக்கிட்டு தற்கொலை
டெல்லியில் லாட்ஜ் ஒன்றில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் லாட்ஜ் ஒன்றில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜானக்புரியைச் சேர்ந்த 19 வயது தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி நேற்று தனது காதலனுடன் துவாரகாவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியுள்ளார். அறையிலிருந்து இன்று வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அறையின் கதவை போலீசார் உடைத்தனர். அப்போது, மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர். அவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொன்ட இளம்பெண்ணின் தந்தை ராணுவத்தில் பணியாற்றி வருகின்றார். மேலும், அந்த இளைஞன் தனது வீட்டில் சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறி மாணவியுடன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் லாட்ஜ் ஒன்றில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள ஜானக்புரியைச் சேர்ந்த 19 வயது தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி நேற்று தனது காதலனுடன் துவாரகாவில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கியுள்ளார். அறையிலிருந்து இன்று வெளியே வராததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அறையின் கதவை போலீசார் உடைத்தனர். அப்போது, மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் பிணமாக கிடந்துள்ளனர். அவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொன்ட இளம்பெண்ணின் தந்தை ராணுவத்தில் பணியாற்றி வருகின்றார். மேலும், அந்த இளைஞன் தனது வீட்டில் சிறப்பு வகுப்புக்கு செல்வதாக கூறி மாணவியுடன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.