செய்திகள்

பெங்களூருவில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்

Published On 2017-06-27 10:59 GMT   |   Update On 2017-06-27 11:48 GMT
பெங்களூருவில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரு:

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருபவர் பவ்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

வட இந்தியாவை சேர்ந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை தேடி பெங்களூருவிற்கு வந்தார். அப்போது கோரமங்களாவை சேர்ந்த வினோத் என்ற வாலிபருடன் பவ்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் வினோத் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். இதை குடித்த இளம்பெண் சிறிது நேரத்தில் மயங்கினார். பின்னர் வினோத் தனது வீட்டிற்கு அவரை தனது நண்பர் தீபக்தாமஸ் உதவியுடன் தூக்கி சென்று பலாத்காரம் செய்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பின்னர் மயக்கம் தெளித்த பவ்யா தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதை அறிந்து கதறி அழுதார். தனக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து அவர் கண்ணீர் மல்க கோரமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் வினோத்தையும் அவருக்கு உதவிய தீபக் தாமஸ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News