செய்திகள்
காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்:
சர்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் 7 முகாம்களை ராணுவத்தினர் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் வன பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
பூஞ்ச் மாவட்டத்தின் மென்தார் பகுதியில் நடந்த இந்த சண்டையில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பூஞ்ச் பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ராணுவ தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 5 வல்லரசு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிடம் விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச எல்லையையொட்டி பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய வீரர்கள் நேற்று இரவு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் 7 முகாம்களை ராணுவத்தினர் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் வன பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
பூஞ்ச் மாவட்டத்தின் மென்தார் பகுதியில் நடந்த இந்த சண்டையில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பூஞ்ச் பகுதியில் கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ராணுவ தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 5 வல்லரசு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிடம் விளக்கம் அளித்துள்ளது.