உள்ளூர் செய்திகள்
- வீட்டில் தனியாக இருந்த சுவேதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலை சம்பவம் தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொளத்தூர்:
கொளத்தூர், சிவசக்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மோகன். சென்னை மாநகராட்சி மண்டலம் 6-ல் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுவேதா (வயது 21). நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த சுவேதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.