உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

கொறுக்கை பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி

Published On 2022-06-23 10:09 GMT   |   Update On 2022-06-23 10:09 GMT
  • ரோட்டரி டெல்டா சங்க தலைவர் காளிதாஸ் தலைமையேற்று மாணவர்களிடையே யோகா பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார்.
  • மாணவர்களுக்கு யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகா எப்படி செய்ய வேண்டும் என்று யோகா மாஸ்டர் ஹரிகிருஷ்ணன் செய்து காண்பித்தார்.

திருத்துறைப்பூண்டி:

டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் கொறுக்கை ஸ்ரீ சாய் சீனிவாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளியின் தாளாளர் கிருஷ்ணகுமார் வரவே ற்றார்.

ரோட்டரி டெல்டா சங்க தலைவர் காளிதாஸ் தலைமையேற்று மாணவர்க ளிடையே யோகா பற்றிய விழிப்பு ணர்வுகளை ஏற்படு த்தினார். இதில் மாணவர்களுக்கு யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யோகா எப்படி செய்ய வேண்டும் என்று யோகா மாஸ்டர் ஹரிகிருஷ்ணன் செய்து காண்பித்தார் .இந்நிகழ்விற்கு ரோட்டரி சங்க செயலாளர் பாலமு ருகன், பொருளாளர் ரமேஷ் மற்றும் தலைவர் தேர்வு ரமேஷ், செயலாளர் தேர்வு ராஜதுரை, உறுப்பி னர் கணபதி, பள்ளியின் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளியின் முதல்வர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News