உள்ளூர் செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே 2 மகள்கள், மகனுடன் பெண் மாயம்

Published On 2022-07-14 09:04 GMT   |   Update On 2022-07-14 09:04 GMT
  • கடந்த 4-ந் தேதி வழக்கம் போல மாடசாமி வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் ராமலெட்சுமி மற்றும் குழந்தைகளையும் காணவில்லை.
  • மனைவி, குழந்தைகள் மாயமான வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறிய மாடசாமி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

தூத்துக்குடி:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாடசாமி (வயது40). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராமலெட்சுமி (35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

குழந்தைகளுடன் தாய் மாயம்

இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வழக்கம் போல மாடசாமி வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வந்து பார்த்த போது வீட்டில் ராமலெட்சுமி மற்றும் குழந்தைகளையும் காணவில்லை.

அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஓட்டப்பிடாரம் போலீசில் 5-ந் தேதி புகார் செய்தார்.

எஸ்.பி. அலுவலகத்தில் மனு

இந்நிலையில் மனைவி, குழந்தைகள் மாயமான வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறிய மாடசாமி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து மனு தொடர்பாக உரிய விசாரணை நடத்த கோரி போலீசாருக்கு அறிவுறு த்தப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை ராமலெட்சுமி, அவர்களது 3 குழந்தைகள் எங்கு சென்றனர்? என அவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News