உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவிகளிடம் தகராறு செய்த வாலிபர் கைது
- முருகவேல்ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ்ஸில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
- ஆனந்த்என்பவர் கல்லூரி மாணவிகளிடம் தகராறு ஈடுபடுவதை பார்த்த முருகவேல், அதனை தட்டி கேட்டுள்ளார்.
திருச்சி,
திருச்சி தொட்டியம் ஸ்ரீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகவேல்(வயது46). இவர் ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ்ஸில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
திருவானைக்கோவில் பஞ்சகரை யாத்திரிகர் நிவாஸ் பகுதியை சேர்ந்த ஆனந்த்(32) என்பவர் கல்லூரி மாணவிகளிடம் தகராறு ஈடுபடுவதை பார்த்த முருகவேல், அதனை தட்டி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தகாத வார்த்தைகளால் திட்டி முருகவேலை தாக்கியுள்ளார். இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் முருகவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர்.