உள்ளூர் செய்திகள்
வெள்ளகோவிலில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
- ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் பகுதியில் உள்ள மாகாளியம்மன், செல்லாண்டியம்மன், கண்ணபுரம் மாரியம்மன், எல்.கே.சி நகர், புற்றுக்கண் நாகாத்தாள், மயில்ரங்கம் திருமலை அம்மன், மாரியம்மன், மஞ்சள் மாதா பகவதி அம்மன், உத்தமபாளையம் மாரியம்மன் கோவில்களில் நேற்று ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.ஆடிவெள்ளியையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.