உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பருவமாற்றத்தால் பாதிக்கும் கால்நடைகள்

Published On 2022-07-08 11:33 GMT   |   Update On 2022-07-08 11:33 GMT
  • இலவசமாக கொடுக்கப்பட்ட ஆடுகள் கடந்த சில நாட்களாக தீவனம் உட்கொள்ளாமல் திடீரென செத்தது.
  • திடீர் பருவமாற்றத்தால் கால்நடைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

அவினாசி :

அவினாசி ஒன்றியம் சின்னேரிபாளையம் பகுதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் கடந்த சில நாட்களாக 3 ஆடுகள் உடல்நலக்குறைவால் செத்தது.இது குறித்து பயனாளிகள் கூறுகையில் ,இலவசமாக கொடுக்கப்பட்ட ஆடுகள் கடந்த சில நாட்களாக தீவனம் உட்கொள்ளாமல் திடீரென செத்தது. இலவசமாக வழங்கும் ஆடுகள் தரமானதாக வழங்க வேண்டும் என்றனர்.

இது குறித்து கால்நடை பராமரிப்பதுறையினர் கூறுகையில்,

கடந்த 10 நாட்களுக்கு முன் கடும் வெப்பம் காணப்பட்டது. ஒரு வாரமாக சீதோஸ்ன நிலைமாறி கடும் குளிருடன் மழை பெய்து வருகிறது. திடீர் பருவமாற்றத்தால் கால்நடைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே உடனடியாக கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும் கால்நடைகளை பராமரித்து பாதுகாத்தால் கால்நடைகளின் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்றனர்.

Tags:    

Similar News