உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2022-07-26 07:19 GMT   |   Update On 2022-07-26 07:19 GMT
  • 22ந்தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி அங்கேயே தங்கியுள்ளார்.
  • முத்துலட்சுமி பெரியப்பா குப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 உடுமலை :

உடுமலை அருகே ஏரிப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் தாதான். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் கைகால்கள் செயலற்ற நிலையில் வாய் பேச முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். இவருடைய மனைவி தெய்வானை சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இந்த தம்பதியின் மகள் முத்துலட்சுமி( வயது 22) .இவருக்கும் உரல்பட்டியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2020 ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் கடந்த 22ந்தேதி பெற்றோர் வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி அங்கேயே தங்கியுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த முத்துலட்சுமி உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகி துடித்த முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து முத்துலட்சுமி பெரியப்பா குப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகி உள்ளதால் ஆர்டிஓ. விசாரணை நடைபெற உள்ளது.

Tags:    

Similar News