உள்ளூர் செய்திகள்

கட்டிட தொழிலாளி வீட்டில் ரூ.5 லட்சம் நகைகள் கொள்ளை

Published On 2024-05-18 09:03 GMT   |   Update On 2024-05-18 09:03 GMT
  • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துறையூர்:

திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 39). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராசாத்தி (35)என்கிற மனைவியும், சுஜித் சரண் (11) என்கிற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு கோத்தகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மணிமாறன் தனது வீட்டினை பூட்டிவிட்டு, குடும்பத்தாருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை மணிமாறனின் தங்கையான மகேஸ்வரி என்பவர் வீட்டினை பார்த்தபொழுது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் எடையுள்ள உள்ள தங்க நகை, ரொக்கம் ரூ.80 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மகேஸ்வரி உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருச்சியில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

துறையூர் நகரப் பகுதியில் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதியிலேயே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News