உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடம் அருகே கிணற்றில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு

Published On 2022-10-06 10:54 GMT   |   Update On 2022-10-06 10:54 GMT
  • பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணபதியப்பன் மகன் ஜெகதீஸ்வரன்
  • இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெருமாகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணபதியப்பன் மகன் ஜெகதீஸ்வரன்,(22) இந்த நிலையில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை, இவரது பெற்றோர்கள் அக்கம்-பக்கம் தேடியும், உறவினர்கள் வீடுகளில் தேடியும், அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது வீடு அருகே உள்ள விநாயகர் கோவில் கிணற்றில் மனித உடல் கிடப்பதாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றிலிருந்து உடலை மீட்டனர். விசாரணையில் அது காணாமல் போன ஜெகதீஸ்வரன் என்பது தெரிய வந்தது இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags:    

Similar News