உள்ளூர் செய்திகள்

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-08-12 10:15 GMT   |   Update On 2022-08-12 10:15 GMT
  • வசந்தகுமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார்.
  • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

கோவை:

கோவை இடிகரை அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் பாலன். இவரது மகன் வசந்தகுமார் (வயது 22). இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

சம்பவத்தன்று வெளியே சென்ற வசத்தகுமார் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது தந்தை கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்து வசந்தகுமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து தற்கொலை செய்து கொண்ட வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News