உள்ளூர் செய்திகள்
வண்ணாரப்பேட்டையில் மாணவிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
- பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கூலி வேலை செய்துவரும் கணேஷ் (30) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
- வலுக்கட்டாயமாக மாணவியின் ஆடையை கழற்றி அவமானப்படுத்தினார்.
ராயபுரம்:
பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுமி மண்ணடியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மாணவி நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கூலி வேலை செய்துவரும் கணேஷ் (30) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். வலுக்கட்டாயமாக மாணவியின் ஆடையை கழற்றி அவமானப்படுத்தினார்.
மாணவி அங்கிருந்து தப்பி வந்து தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி இந்த வழக்கை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றினார்.
விசாரணை நடத்தி மகளிர் போலீசார் கணேசை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.