உள்ளூர் செய்திகள்

ரூ.323 கோடி செலவில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Published On 2022-07-25 07:15 GMT   |   Update On 2022-07-25 11:45 GMT
  • மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
  • 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 42 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, என். கயல்விழி செல்வராஜ், மேயர் ஆர்.பிரியா, எம்.எல்.ஏ. நா. எழிலன், துணை மேயர் மு. மகேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News