உள்ளூர் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஆவடி போலீஸ் நிராகரித்தது
- கோர்ட்டு உத்தரவுபடி பொதுக்குழு கூட்டத்துக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தனி நபர் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால் இதில் தலையிட முடியாது.
- பொது வெளியில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதியோ, மறுப்போ கூற முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இதற்கு அனுமதி தரக்கூடாது என்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆவடி போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு ஆவடி போலீஸ் தரப்பில் இன்று கூறப்பட்டு இருப்பதாவது:-
கோர்ட்டு உத்தரவுபடி பொதுக்குழு கூட்டத்துக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தனி நபர் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால் இதில் தலையிட முடியாது.
பொது வெளியில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதியோ, மறுப்போ கூற முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஆவடி போலீஸ் நிராகரித்தது.