உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி திடீர் சாவு

Published On 2022-06-12 09:48 GMT   |   Update On 2022-06-12 09:48 GMT
  • மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்ற மாடசாமி மரத்தில் சாய்ந்தவாறு இறந்து விட்டார்.
  • தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் மாடசாமி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது57). ஆடு மேய்க்கும் தொழிலாளி.

இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து உள்ளது. இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது அங்குள்ள மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்ற மாடசாமி மரத்தில் சாய்ந்தவாறு இறந்து விட்டார். இதனை பார்த்தவர்கள் கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாடசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News