உள்ளூர் செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணை கேனுடன் மூதாட்டி தர்ணா

Published On 2022-07-25 10:13 GMT   |   Update On 2022-07-25 10:13 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
  • தீயணைப்புத் துறையினர் அவரை விட்டு தண்ணீர் தெளித்து, அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர்.

கோவை

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் போன்றோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

கோவை ராம் நகர் 67வது வார்டைசேர்ந்தவர் கணபதி அம்மாள் (வயது 80). இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தபோது நுழைவு வாயில் முன்பு மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்த போலீசார் தீயணைப்புத் துறையினர் அவரை விட்டு தண்ணீர் தெளித்து, அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தனர்.

இந்நிலையில் அவர் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், "எனது வீட்டிற்கு முன்பு சாக்கடை தண்ணீர் பல ஆண்டுகளாக தேங்கி உள்ளது. இதனை பலமுறை மாநகராட்சி நிர்வாகம், போலீசார் என பல்வேறு அரசு துறைகளுக்கும் மனு அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதனால் மனவிரக்தி அடைந்த நான் இங்கு தற்கொலை செய்து கொள்வது என முடிவுடன் வந்துள்ளேன், எனக் கூறினார். இதனை அடுத்து போலீசார் அவர் வைத்திருந்த பையை பரிசோதனை செய்தலில் ஒரு லிட்டர் மண்எண்ணை கேன் வைத்திருந்தது உறுதியானது. உடனே போலீசார் அந்த கேனை பறிமுதல் செய்தனர். மேலும் கணபதி அம்மாளை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க போலீசார் அறிவுறுத்தி உடன் சென்றனர். 

Tags:    

Similar News