கோவையில் ஆம்புலன்சில் குழந்தை பெற்ற ஒடிசா பெண்
- சபானா பானு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
- ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ராவத்தூர் பிரிவு அருகே சபானா பானுவுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
கோவை
ஒடிசாவை சேர்ந்தவர் அசுமோத் அலி(வயது32). இவரது மனைவி சபானா பானு.
அசுமோத் அலி தனது மனைவியுடன் கோவை கரையான்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார்.
சபானா பானு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று திடீரென சபானா பானுவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.இதையடுத்து அவரது கணவர் அசுமோத் அலி, சபானா பானுவை சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.உடனடியாக அசுமோத் அலி தனது மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ராவத்தூர் பிரிவு அருகே சபானா பானுவுக்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதையடுத்து ஆம்புல ன்சில் இருந்த பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ உதவியாளர் அவருக்கு பிரசவம் பார்த்தார். இதில் சபானா பானுவுக்கு ஆண்குழந்தை பிறந்தது.
பின்னர் தாயும், சேயும், கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அங்கு 2 பேரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.