உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

உயர்நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் பார்களுக்கு புதிய உரிமம்- டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

Published On 2022-09-03 22:32 GMT   |   Update On 2022-09-03 22:32 GMT
  • பல இடங்களில் ஒப்பந்தம் முடிந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன.
  • பார் டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான் கடை பார்களின் டெண்டர் காலம் கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப்பிரியர்கள் கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், பார்களுக்கான உரிமம் தொடர்பான டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்த்து பார் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள், பார் டெண்டர் நடைமுறையை மட்டும் தொடரலாம் எனவும், யாருக்கும் உரிமம் வழங்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து சென்னை உள்பட பல இடங்களில் ஒப்பந்தம் முடிந்த டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளதாகவும், உயர்நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும் பார்களுக்கான புதிய உரிமம் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் மாவட்ட மேலாளர்களுக்கு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News