உள்ளூர் செய்திகள்

ரேசன் அரிசி கடத்தியதாக ஆட்ேடாவுடன் கைதான 2 பேரை படத்தில் காணலாம். 

விழுப்புரம் அருகே: ஆட்டோவில் கடத்திய 400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-07-04 08:45 GMT   |   Update On 2022-07-04 08:45 GMT
  • விழுப்புரம் அருகே ஆட்டோவில் கடத்திய 400 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
  • அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனை போட்டனர்.

விழுப்புரம்: 

விழுப்புரம் அருகே உள்ள மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், ஏட்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் வெள்ளியனூர் கூட்டுபாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனை போட்டனர். சோதனையில் ஆட்டோவில் 400 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பரிக்கல்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜி (வயது 26), மொளசூர் பகுதியை சேர்ந்த அஜித் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ரேசன் அரிசி எந்த பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டது.? கடத்தலுக்கு மூளையாக இருப்பது யார் ? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. கைதான 2 பேரும் ஆட்டோவுடன் மயிலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News