உள்ளூர் செய்திகள்

ஆடுகளுக்கான தடுப்பூசி முகாம்

Published On 2022-07-21 07:32 GMT   |   Update On 2022-07-21 07:32 GMT
  • ஆடுகளுக்கான தடுப்பூசி முகாம் 20-ந் தேதி நடந்து வருகிறது.
  • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை

மதுரை மாவட்டத்தில் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை பாதிக்கும் ஆட்டுக்கொல்லி நோய் பரவாமல் தடுக்கும் வகையிலும், பருவமனை தொடங்க உள்ளதால் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் இன்று (20-ந் தேதி) முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களில் நடைபெறுகிறது.

ஆடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி போடப்படும் நாட்களில் முறையாக ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டு நோயில் இருந்து ஆடுகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News