உள்ளூர் செய்திகள்

உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

Published On 2022-07-06 07:45 GMT   |   Update On 2022-07-06 07:45 GMT
  • உசிலம்பட்டியில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
  • தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு மாநில துணைத்தலைவர் உதயகுமார், துணைச் செயலாளர் நேதாஜி ஆகியோர் தலைமை தாங்கினர்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டியில் விவசாயிகள் சங்கம் சார்பில் உழவர்கள் தின விழா மற்றும் இலவச மின்சாரம் கேட்டு நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உசிலம்பட்டியில் நடந்தது.

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு மாநில துணைத்தலைவர் உதயகுமார், துணைச் செயலாளர் நேதாஜி ஆகியோர் தலைமை தாங்கினர்.

58 கிராம கால்வாய் சங்க செயலாளர் பெருமாள் முன்னிலை வகித்தார். 58 கிராம கால்வாய் பாசன சங்க தலைவர் சின்னயோசனை, பொருளாளர் தமிழ் செல்வன், ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், மதுரை மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் சொக்கர், காராமணி, துரைசிங்கம், சின்னான் மற்றும் விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டு உயிர் நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News