search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tribute"

    • நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
    • தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவால் உயிரிழந்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    விஜயகாந்த் மரணம் அடைந்து ஒரு மாதத்தை கடந்துவிட்ட நிலையிலும் அவரது நினைவிடத்தில் தினமும் பொதுமக்களும் தே.மு.தி.க. தொண்டர்களும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    குறிப்பாக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விலை உயர்ந்த மாலைகளை வாங்கி வைத்து விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    நினைவிடத்தில் விஜயகாந்த் புகைப்படம் மலர் தூவி அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருபவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி அஞ்சலி செலுத்த வரும் பொது மக்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அதனை தங்களது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவதையும் வழக்கமாகக் கொண்டு உள்ளனர்.

    இதன் மூலம் விஜயகாந்த் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருவது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, "எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் தொடர்ச்சியாக பொதுமக்கள் நேரில் வந்து விஜயாந்த்துக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இது எங்களுக்கு நெகழ்ச்சியாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்திருப்பதாகவும் அதுதான் தற்போது வெளிப்பட்டு வருவதாகவும் தே.மு.தி.க. நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பிரதமர் மோடி மகாத்மா காந்தி குறித்து தனது எக்ஸதளத்தில் பதவிட்டுள்ளார்.
    • தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன்.

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நமது தேசத்திற்காக தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள், மக்களுக்கு சேவை செய்யவும், நாட்டுக்காக அவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவும் நம்மை ஊக்குவிக்கின்றன.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர்:

    சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனின் 92-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் ரெயில் நிலையம் அருகே நினைவு மண்டபத்தில் உள்ள குமரன் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக தியாகி திருப்பூர் குமரன் சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


    அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான பாரி கணபதி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய், திருப்பூர் குமரன் அறக்கட்டளை நிர்வாகி பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    இதேப்போல் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் காலமானார்.
    • சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார்.

    பூந்தமல்லி:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவால் இன்று காலமானார். அவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் அட்கோ நகர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார். அதில் குடியேற ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.

    பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக தொய்வடைந்த நிலையில் மீண்டும் வீடு கட்டும் பணிகள் வேகம் எடுத்தது. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் பால் காய்ச்சப்பட்டதாகவும் விஜயகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டில் விஜயகாந்த் வசிக்க வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்ட நிலையில் அந்த ஆசை நிறைவேறாமலே போனது. 

    • விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலத் தலைவருமான சங்கரய்யா காலமானார்.
    • பலர் கலந்துக் கொண்டு சங்கராய்யா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    தொட்டியம்

    விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலத் தலைவருமான சங்கரய்யா காலமானார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தொட்டியத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் தலைமையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி , தி.மு.க. நகர செயலாளர் விஜய்ஆனந்த், தி.மு.க. வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் காடுவெட்டி அகதீஸ்வரன், முன்னாள் காங்கிரஸ் நகர தலைவர்கள்

    மோகன் , அய்யாசாமி, ம.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் சேகர் ,கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஏலூர்பட்டி முருகன், முருகானந்தம், கட்டுமான சங்க தோளூர்பட்டி தேவராஜ், திருநாராயணபுரம் தர்மலிங்கம், சமூக ஆர்வலர் நீலமேகம், சந்தப்பேட்டை அஸ்ரப் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சங்கராய்யா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன், காண்டிராக்டர். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் மதன்குமார் (29).

    எம்.பி.பி.எஸ். படித்துள்ள இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரியில் தடயவியல் மருத்துவம் மற்றும் நச்சுவியல் மேற்படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் உள்ள விடுதியில் மதன்குமார் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்நிலையில் திடீரென மதன்குமார் மாயமானார். சகமாணவர்கள் அவரை தேடிய போது விடுதியின் பின்புறம் மதன்குமார் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், விடுதியின் மாடியில் வைத்து டாக்டர் மதன்குமாரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது உடலை தீ வைத்து எரித்ததாகவும், பின்னர் பாதி எரிந்த நிலையில் உடலை தூக்கி கீழே போட்டதில் அந்த உடல் விடுதியின் பின்புறத்தில் விழுந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே டாக்டர் மதன்குமார் உடல் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மதன்குமார் உடல் விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டியை அடுத்த புதூரில் உள்ள சொந்த ஊருக்கு ஆம்புலன்சில் அவரது உடல் இன்று காலை கொண்டு வரப்பட்டது.

    இதையொட்டி அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் டாக்டர் மதன்குமாரின் உடலை பார்த்து கதறி அழுத படியே அஞ்சலி செலுத்தினர்.

    அமைச்சர் அஞ்சலி

    தொடர்ந்து அவரது உடல் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா உள்பட பலர் மதன்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது உடல் நாமக்கல் மின் மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

    இதற்கிடையே மகன் சாவுக்கான காரணத்தை கண்டறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
    • ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    தஞ்சாவூர்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

    இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது

    இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் , குழந்தைகளும் உயிரிழந்து வருகின்றனர்.

    சமீபத்தில் காஸாவில் உள்ள மருத்துவம னையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியானது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

    இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் போருக்கு எதிரான குரல்கள் ஒலித்து வருகின்றன.

    பிரதமர் மோடி , தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே அமைதி திரும்பவும் போரில் உயிர்நீத்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் காயம டைந்தவர்கள் விரைவில் நலம் பெறவும் உலகெங்கும் மனிதம் தழைக்கவும் தஞ்சை நகர பொதுமக்கள் அமைதி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர் .

    தஞ்சை ரெயிலடி பகுதியில் ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் தஞ்சாவூர் நகர பொதுமக்கள் சார்பில் 50 பெண்கள் இந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்வில் ஈடுபட்டனர்.

    போரில் இறந்தவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி அவர்களின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் இந்த போரினால் காயமடைந்தவர்கள், உடமைகளை இழந்தவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவும் போர் நிறுத்தம் ஏற்பட்டு அமைதி திரும்பவும் கூட்டு அமைதி பிரார்த்தனை செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார் தலைமையில் மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வையாளர் கல்யா ணசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • காவல்துறையினரும் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
    • வீரமரணம் அடைந்தவர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு உயிரிழந்த காவலர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு தூண் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் , போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் சிங் ஆகியோர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்நது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு , துணை போலீஸ் சூப்பிரண்டுகள் , ஊர்க்காவல் படையினர் உட்பட அனைத்து நாகை மாவட்ட காவல்துறை யினரும் மலர் வளையம் வைத்து வீரவ ணக்கம் செலுத்தினார்கள்.

    பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்பு ஆயுதப்படை காவல் ஆய்வாளரின் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தி, போலீசார் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • வான் மழை மாதாந்திர கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக எம். எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் வனம் அறக்கட்டளையில் வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் மறைவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் மரக்கன்று நடப்பட்டது. பின்னர் நடைபெற்ற வான் மழை மாதாந்திர கூட்டத்தில் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வனம் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக எம். எஸ்.சுவாமிநாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பல்லடம் ஜெயப்பிரகாஷ் வீதியில் உள்ள சங்க அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதணன், பல்லடம் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியம், மற்றும் சுப்பிரமணியம், பொருளாளர் லோகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
    • வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் செலுத்தப்படும் காணிக்கைகளை ஒவ் வொரு மாதமும் திறந்து எண்ணப்படும். அதன்படி நேற்று இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவா னந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலிங்கம், ஆய்வர் சங்கீதா, அறங்கா வலர் குழு தலைவர் செந்தில்குமார் பூசாரி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    இதில் 94 லட்சத்து 42 ஆயிரத்து 622 ரூபாய் ரொக்கமும், 315 கிராம் தங்க நகைகளும், 1,110 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த பணியின்போது அறங்காவலர்கள் பூசாரிகள் தேவராஜ், ராமலிங்கம், செல்வம், சரவணன், வடி வேல், சந்தானம் மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழி யர்கள், ஆகியோர் உடனி ருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.

    • பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    • இதில் ரூ.27 லட்சத்து 76 ஆயிரம் 54 கிராம் தங்கம் இருந்தது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் மாரியம் மன் கோவில் சக்தி ஸ்தலங்க ளில் பிரசித்தி பெற்ற கோவி லாகும். இங்கு ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப் பட்டு எண்ணப்படுவது வழக்கம்.

    அதன்படி இம்மாதமும் நேற்று கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் கோசாலை உண்டி யல் 1, அன்னதான உண்டியல் 1 என மொத்தம் 13 உண்டி யல்கள் திறந்து எண்ணப் பட்டன.

    திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவில் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் உதவி ஆணையாளர் வளர் மதி (பொறுப்பு) ஆகியோர் முன்னிலையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் தலைமை யில் காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணப்பட் டன.

    ரூ.27 லட்சம் காணிக்கை

    கோவில் மண்டபத்தில் வைத்து உண்டியல் எண் ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக நிரந்தர உண்டியல் மூலம் ரூ.25 லட்சத்து 81 ஆயிரத்து 969-ம் கோசோலை உண்டியல் மூலம் ரூ.41 ஆயிரத்து 810-ம், அன்னதான உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 614 என மொத்தம் ரூ.27 லட்சத்து 76 ஆயிரத்து 393 ரொக்கமும், 54 கிராம் தங்கமும், 255 கிராம் வெள்ளி இனங்களும் கிடைக்கப்பெற்றது.

    மேலும் காணிக்கை எண்ணும் பணியில் ராஜபா ளையம் சரக ஆய்வாளர், மகளிர் சுய உதவிக் குழுவினர், பக்தர் சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
    • முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சி அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழ்செல்வன், பூவைசெழியன், மாவட்ட அவை தலைவர் குணசீலன், மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம், ராணி, அந்தூர் ராஜேந்திரன், முத்தமிழ்செல்வன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார், சிவப்பிரகாசம், பேரூர் செயலாளர் செந்தில்குமார், வக்கீல்கள் கனகராஜ், ராமசாமி, துறைமங்கலம் சந்திரமோகன், கீழப்புலியூர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

    ×