உள்ளூர் செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2022-07-18 09:01 GMT   |   Update On 2022-07-18 09:01 GMT
  • மதுரை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
  • மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று இரவு மர்ம மனிதர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் கோவிலில் இருந்த 2 உண்டியல்களை உடைத்து வெளியே தூக்கிச்சென்று பணத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப் இன்ஸ்பெக்டர் ஜெயா கஜேந்திரன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News