கொடுக்கல்-வாங்கல் தகராறு: 5 பேர் மீது வழக்கு
- கொடுக்கல்-வாங்கல் தகராறு காரணமாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இதுகுறித்த புகாரின்பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் பாண்டியனிடம் விசாரணை நடத்துகின்றனர்.
மதுரை
தனக்கன்குளம், முல்லை நகரை சேர்ந்தவர் பாண்டியராஜ் (54). இவர் பாலசுப்பிரமணியம் நகர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் (31) என்பவரிடம் ரூ.2 லட்சத்து 14 ஆயிரத்து 500 கடன் வாங்கினார்.
அதில் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 500-ஐ திருப்பி செலுத்தி விட்டார். மீதமுள்ள ரூ. 1 லட்சத்துக்கு காசோலை கொடுத்தார். அது வங்கியில் பணமின்றி திரும்பி விட்டது. பாண்டியராஜ் நேற்று நண்பர்களுடன் திருநகர் 8-வது பஸ் நிறுத்தம் டீக்கடை முன்பு நடந்து சென்றார். அங்கு வந்த அருண்பாண்டியன் அவரை தாக்கி விட்டு தப்பினார்.இதுகுறித்த புகாரின்பேரில் திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் பாண்டியனிடம் விசாரணை நடத்துகின்றனர்.
இதே வழக்கில் அருண்பாண்டியன் கொடுத்த புகாரின்பேரில் பாண்டியராஜ், ராஜபாண்டி, காளிமுத்து, பார்த்தசாரதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.