உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 மாணவி தற்கொலை

Published On 2022-09-06 07:43 GMT   |   Update On 2022-09-06 07:43 GMT
  • மதுரை அருகே பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • தந்தை திட்டியதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மதுரை

மதுரை அருகே உள்ள கள்ளந்திரியை அடுத்த தொப்புளாம்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி மகள் அபிநயா (வயது 16). இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்தார். அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு மூர்த்தி காப்பு கட்டி இருந்தார். இதனைப் பார்த்த அபிநயா, 'நானும் காப்பு கட்டுவேன்' என்று விருப்பம் தெரிவித்தார்.

இதற்கு மூர்த்தி சம்மதிக்கவில்லை. மேலும் அவர், மகளை திட்டினாராம். மனவேதனை அடைந்த அபிநயா, தந்தையிடம் கோபித்துக் கொண்டு பொய்கைகரைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக இறந்தார். அப்பன்திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தினர்.

Tags:    

Similar News