உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தற்கொலை

Published On 2022-08-16 08:41 GMT   |   Update On 2022-08-16 09:21 GMT
  • மதுரை அருகே திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
  • கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மதுரை

உசிலம்பட்டியை அடுத்த சீமானூத்தை சேர்ந்தவர் சின்னம்மாள் (43). இவரது கணவர் நடராஜ். இவர்களுக்கு மகள் சித்ரா (23) உள்ளார். இவரை கே.பரசுராமன் பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனர்.

அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சித்ரா- ராமகிருஷ்ணன் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

வாழ்க்கையில் விரக்தி அடைந்த சித்ரா நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாய் சின்னம்மாள் சேடப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News