மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
- மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- விழா ஏற்பாடுகளை தங்கவேல் ஜோதிடர் மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மாலைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது. 2 நாள் நடைபெற்ற பூஜையில் முதல் நாள் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, விக்னேஸ்வர பூஜை, சுதர்சன ஹோமம், பூர்ணாஹுதி தீபாராத னையும் நடைபெற்றது.
2- நாள் நடைபெற்ற பூஜையில் அனுக்ஞை பூஜை, ரக்ஷாபந்தனம் கலச பூஜை, தன்வந்திரி ஹோமம், குபேரலெட்சுமி ஹோமம் முடிந்து தீபா ராதனை நடைபெற்றது. தொடர்ந்து ராமேசுவரம், அழகர்கோவில் உள்ளிட்ட புனித தீர்த்தங்களை சிவாச்சாரியார்கள் எடுத்து மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பூஜை பொருட்களும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை தங்கவேல் ஜோதிடர் மற்றும் கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.