உள்ளூர் செய்திகள்

மருந்து விலையை குறைக்ககோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-11 08:26 GMT   |   Update On 2022-07-11 08:26 GMT
  • மருந்து விலையை குறைக்ககோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மதுரை

மதுரை கலெக்டர் அலு வலகம் அருகே தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி.யில் இருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகர ணங்களுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் குறைந்த பட்சம் 5 சதவீதத்தை சுகாதாரத்திற்கு செலவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News