உள்ளூர் செய்திகள்
நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
- நின்றிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
- மலைச்சாமி காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை ஹவுசிங் போர்டைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 54), கட்டிட தொழிலாளி. வேலையை முடித்துவிட்டு நேற்று இரவு நாகராஜ் கரிசல்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி (48) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. மேல க்கோட்டை பெரியார் காலனி சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது பழுதாகி நின்று கொண்டி ருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த நாகராஜ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.மலைச்சாமி காயங்களுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.