என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Motorcycle"
- ஸ்டாண்டர்டு மாடலுடன் 1390 சூப்பர் டியூக் R இவோ மாடலும் அறிமுகம்.
- சூப்பர் டியூக் மாடலில் 1350சிசி என்ஜின் உள்ளது.
கே.டி.எம். நிறுவனம் தனது 1390 சூப்பர் டியூக் R மாடலை அறிமுகம் செய்தது. புதிய சூப்பர் டியூக் மாடலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அதன் ஹெட்லைட் உள்ளது. டியூக் 990 மாடலில் உள்ள புது ஹெட்லைட் இந்த மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடலுடன் 1390 சூப்பர் டியூக் R இவோ மாடலும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சூப்பர் டியூக் மாடலில் 1350சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 110mm போர் உள்ளது. அந்த வகையில் இந்த என்ஜின் 190 ஹெச்.பி. பவர், 145 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது முந்தைய மாடலில் உள்ள என்ஜினை விட 10 ஹெச்.பி. மற்றும் 5 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும்.

2024 கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் R மாடலில் 17.5 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளது. இந்த மாடலில் மெயின் ஃபிரேம், சஸ்பென்ஷன் யூனிட்கள் மற்றும் பிரேக்கிங் ஹார்டுவேர் உள்ளிட்டவை முந்தைய 1290 சூப்பர் டியூக் R மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கின்றன.
புதிய சூப்பர் டியூக் மாடலில்- ரெயின், ஸ்டிரீட், ஸ்போர்ட், பெர்ஃபார்மன்ஸ் மற்றும் டிராக் என ஐந்து ரைடிங் மோட்கள் உள்ளன. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் கே.டி.எம். கனெக்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வீலி கண்ட்ரோல் அம்சங்கள் விரும்புவோர் தேர்வு செய்து கொள்ளும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது.

2024 கே.டி.எம். 1390 சூப்பர் டியூக் R இவோ மாடலில் செமி ஆக்டிவ் WP சஸ்பென்ஷன் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் புதிதாக ஃபேக்டரி லான்ச் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் இரு மாடல்களிடையே பெரிய வித்தியாசம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இவோ மாடலின் ஃபோர்க்கில் மட்டும் புளூ நிற ஸ்டிரைப் உள்ளது.
- ஸ்பெஷல் எடிஷன் மாடல் மொத்தத்தில் 25 யூனிட்களே உருவாக்கப்பட இருக்கின்றன.
- இதுபோன்ற யூனிட்கள் இதற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட மாட்டாது.
ராயல் என்பீல்டு நிறுவனம் தனது புதிய ஷாட்கன் 650 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை கோவாவில் நடைபெற்ற மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. இந்த பைக் அறிமுகம் செய்யப்படும் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில், ஷாட்கன் 650 பற்றிய அறிவிப்பு அனைவரையும் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
புதிய ஷாட்கன் 650 மாடலின் மோட்டோவெர்ஸ் எடிஷன் மொத்தத்தில் 25 யூனிட்களே உருவாக்கப்பட இருக்கின்றன. ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிஷன் விலை ரூ. 4 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடலின் முதற்கட்ட யூனிட்கள் அனைத்தும் மோட்டோவெர்ஸ் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் அதிர்ஷ்டசாலிகளுக்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஷாட்கன் 650 மாடல் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தான் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ப்ரோடக்ஷன் வெர்ஷனின் விலை சற்று குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.
ஷாட்கன் 650 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2021 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்த SG650 கான்செப்ட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஷாட்கன் 650 மோட்டாவெர்ஸ் எடிஷன் மாடலில் பிரத்யேக வடிவமைப்பில் கைகளால் பெயிண்ட் செய்யப்பட்ட பாடி பேனல்கள், கிரேடியன்ட் ஸ்டைல் கிராஃபிக்ஸ் மற்றும் நியான் டீ-டெயிலிங் உள்ளிட்டவை சிறப்பம்சமாக உள்ளது.

தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் ஷாட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிஷனின் 25 யூனிட்களும் கடந்த பல மாதங்களாக சிறப்பு கவனமுடன் உற்பத்தி செய்யப்பட்டவை ஆகும். இதுபோன்ற யூனிட்கள் இதற்கு பிறகு உற்பத்தி செய்யப்பட மாட்டாது என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.
புதிய ஷாட்கன் 650 மாடலிலும் சூப்பர் மீடியோர் 650 மாடலில் உள்ளதை போன்ற சேசிஸ் வழங்கப்பட்டு உள்ளது. எனினும், வித்தியாசமான வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த மாடலிலும் 649சிசி, ஏர்/ஆயில் கூல்டு, பேரலல் டுவின் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- சிவகாசி அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் மர அரவை மில்லில் வேலை பார்த்து வருகி றார்.
இவரது மனைவி அச்சகத்தில் வேலை பார்க்கிறார். இவர்களது மகன் ஜெயராஜன் (வயது 19). விருதுநகரில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் தனது நண்பர்கள் மோகன்ராஜ், மாரீஸ் கார்த்திக் ஆகியோ ருடன் அழகாபுரியில் உள்ள ஒடையில் குளிக்க சென்றனர். பின்னர் மாலை யில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.
மோட்டார் சைக்கிளை ஜெயராஜன் ஓட்டி வந்தார். அவரது நண்பர்கள் பின்னால் அமர்ந்திருந்தனர்.
சுக்கிரவார்பட்டி பேப்பர் மில் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் ஜெயராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்தார்.
மோகன்ராஜ், மாரீஸ் கார்த்திக் லேசான காயங்களுடன் தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர் களை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது ஜெயராஜன் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து ஜெய்சங்கர் திருத்தங்கல் போலீஸ் நிலை யத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டி.வி.எஸ். நிறுவனத்தின் ஜூப்பிட்டர் மாடல் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்.
- உள்நாட்டு விற்பனையில் டி.வி.எஸ். நிறுவனம் 25.01 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த அக்டோபர் மாத விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. டி.வி.எஸ். நிறுவனத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச விற்பனையில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிக யூனிட்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது.
2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிருவனம் 4 லட்சத்து 19 ஆயிரத்து 292 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது கடந்த ஆண்டு விற்பனையான 3 லட்சத்து 43 ஆயிரத்து 614 யூனிட்களை விட அதிகம் ஆகும். இதுதவிர மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடும் போது, 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனையான 3 லட்சத்து 85 ஆயிரத்து 443 யூனிட்களை விட அதிகம் ஆகும்.

இதன் மூலம் டி.வி.எஸ்.-இன் உள்நாட்டு விற்பனை 25.01 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் அதிகம் விற்பனையான மாடல்களில் டி.வி.எஸ். ஜூப்பிட்டர் ஸ்கூட்டர் முதலிடம் பிடித்து இருக்கிறது. இந்த மாடல் 91 ஆயிரத்து 824 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது 19.19 சதவீதம் அதிகம் ஆகும்.
- கன்னியாகுமரியில் மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை தொடங்கி வைத்தார்.
- வழிநெடுகிலும் மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
அடுத்த மாதம் (டிசம்பர்) 17-ந்தேதி சேலத்தில் தி.மு.க. இளைஞரணி மாநாடு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
இதனையொட்டி, அவர் கன்னியாகுமரியில் மாநாட்டு பிரசார மோட்டார் சைக்கிள் வாகன பேரணியை கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.
வேதாரண்யம் பகுதிக்கு வந்த தி.மு.க. இளைஞரணி மோட்டார் சைக்கிள் பிரசார குழுவினருக்கு நாகை மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருான கவுதமன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான புகழேந்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், தலைஞாயிறு பேரூர் செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் துரை ராசு, மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் அசோக்குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாமோதரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ரவிச்சந்திரன், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பேரணி குழுவினருக்கு வழிநெடுகிலும் மேளதா ளங்கள் முழங்க, பட்டாசு வெடிக்கப்பட்டும், இனிப்பு வழங்கியும், மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்க ப்பட்டது.
- ஹிமாலயன் 450 மாடலில் 452சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது.
- அப்ரிலியா RS457 அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையில் மிடில்வெயிட் மோட்டார்சைக்கிள்கள் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இளம் வாடிக்கையாளர்களில் பலரும் டூரிங் மற்றும் ஆஃப் ரோடிங் என பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதையொட்டி பஜாஜ், டிரையம்ப், ராயல் என்பீல்டு என இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் இந்த பிரிவில் கவனத்தை திருப்பி உள்ளன. அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 450 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

நவம்பர் 24-ம் தேதி நடைபெற இருக்கும் மோட்டோவெர்ஸ் 2023 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹிமாலயன் 450 மாடலில் முற்றிலும் புதிய 452சிசி, சிங்கில் சிலிண்டர் DOHC லிக்விட் கூல்டு Fi என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 40.02 பி.எஸ். பவர், 40 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என்று தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ரைடு மோட்கள், ஸ்விட்ச் செய்யக்கூடிய ரியர் ஏ.பி.எஸ்., ஸ்லிப் / அசிஸ்ட் கிளட்ச், யு.எஸ்.டி. முன்புற ஃபோர்க்குகள், மோனோஷாக் ரியர் சஸ்பென்ஷன், எல்.இ.டி. லைட்டிங் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம், அகலமான ஹேண்டில்பார், பெரிய ஃபியூவல் டேன்க், யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் வழங்கப்படும் என தகவல்.

ராயல் என்பீல்டு நிறுவனம் தவிர அப்ரிலியா இந்தியா தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் RS457 மாடலை அடுத்த மாதமோ அல்லது 2024 துவக்கத்திலோ அறிமுகம் செய்யலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச சந்தையில் இந்த மாடலின் விலை விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இந்தியாவில் இதன் விலை ரூ. 3.8 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
- சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.
- ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னை:
சென்னை அபிராமபுரம் சி.பி.ராமசாமி சாலை, பிம்மண்ணா கார்டன் சாலை சந்திப்பு அருகே அடுக்கு மாடி குடியிருப்பு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை முதலமைச்சர் சென்ற சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.
அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரின் பெயர் அஜய்குமார் என்பது தெரியவந்தது. ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு:
சென்னை மறைமலை நகரை சேர்ந்தவர் கோகுல் (வயது21). தனியார் நிறு வனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் 'வீலிங்' சாகசத்தில் ஈடுபட்டார். அவர் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதுகுறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட கோகுலை கைது செய்தனர். அவர் சாகசம் செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுபோல் மோட்டார்சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் டிரைவிங் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஹோண்டா CB350 மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட் வழங்கப்படுகிறது.
- புதிய CB350 மாடலிலும் 348.36சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனத்தின் CB350 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஏற்கனவே உள்ள 350சிசி பிளாட்ஃபார்மை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனினும், ஹைனஸ் CB350 மற்றும் CB350RS மாடல்களில் இருந்து வித்தியாசப்படுத்தும் வகையில் சிறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
புதிய ஹோண்டா CB350 மாடலில் வட்ட வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லைட் வழங்கப்படுகிறது. இத்துடன் மேட் ஃபினிஷ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. புதிய ஹோண்டா CB350 மாடல் பிரெசியஸ் ரெட் மெட்டாலிக், பியல் இக்னியஸ் பிளாக், மேட் கிரஸ்ட் மெட்டாலிக், மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் மற்றும் மேட் டியூன் பிரவுன் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
இந்த வேரியண்ட்கள் அனைத்திலும் பிரவுன் நிற லெதர் சீட், பைக் நிறத்தால் ஆன சீட் கவர் வழங்கப்படுகிறது. புதிய CB350 மாடலிலும் 348.36சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.78 ஹெச்.பி. பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இந்த மாடலில் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஸ்பிரிங்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310mm, பின்புறத்தில் 240mm டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன. இத்துடன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. புதிய ஹோண்டா CB350 மாடல் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது.
இத்துடன் எல்.இ.டி. லைட்டிங், ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம், ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல் மற்றும் எமர்ஜன்சி ஸ்டாப் சிக்னல் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் புதிய ஹோண்டா CB350 மாடல் DLX மற்றும் DLX ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
விலை விவரங்கள்:
ஹோண்டா CB350 DLX ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 900
ஹோண்டா CB350 DLX ப்ரோ ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்து 800
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- மிடில்வெயிட் பிரிவில் அதிக போட்டி நிலவி வருகிறது.
- ஜெ சீரிஸ் என்ஜின் கொண்ட மாடல்களை அதிகப்படுத்துகிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது CB 350 ஹைனஸ் மாடலின் புதிய வேரியண்டை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப ஆண்டுகளில் 350 முதல் 400 சிசி வரையிலான திறன் கொண்ட மாடல்கள் அடங்கிய மிடில்வெயிட் பிரிவில் அதிக போட்டி நிலவி வருகிறது.
அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஜெ சீரிஸ் என்ஜின் கொண்ட மாடல்கள் எண்ணிக்கையை பரவலாக அதிகப்படுத்தி இருக்கிறது. இதன் நீட்சியாகவே புல்லட் 350 மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்பீல்டு தவிர ஹோண்டா நிறுவனமும் மிடில்வெயிட் பிரிவில் தனது கவனத்தை அதிகப்படுத்தி வருகிறது.

தற்போது ஹோண்டா நிறுவனம் சந்தையில் அதிக பிரபலமாக விளங்கும் கிளாசிக் 350 மாடலுக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் வகையில் புதிய மாடலை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதனை உணர்த்தும் வகையில் புதிய மாடலுக்கான டீசர்களையும் ஹோண்டா வெளியிட்டு உள்ளது. அதில் புதிய மாடல் டெல்ஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகளை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இதில் உள்ள அலாய் வீல்கள் ஹோண்டா ஹைனஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது. தற்போது ஹைனஸ் CB350 மாடல் DLX, DLX ப்ரோ, DLX ப்ரோ க்ரோம் மற்றும் லெகசி எடிஷன் போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 லட்சத்து 09 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது.