உள்ளூர் செய்திகள்

விபத்தில் வாலிபர்-முதியவர் பலி

Published On 2022-08-09 09:37 GMT   |   Update On 2022-08-09 09:37 GMT
  • விபத்தில் வாலிபர் பலியானார்கள்.
  • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

மதுரை

ஹார்விபட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் தனுஷ்கோடி (வயது 68). இவர் மோட்டார் சைக்கிளில் கூடல் நகர் ெரயில்வே மேம்பால பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த தனுஷ்கோடியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து பழங்காநத்தம் பசும்பொன் நகர் , ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை ஆனைகுளம், வடக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்தி கேயன் (வயது 18). தண்ணீர் லாரி கிளீனராக இருந்தார். நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் சென்றபோது கட்டப்புலி நகரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

உசிலம்பட்டியை அடுத்த கீழப்பச்சேரியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 26). கொத்தனார். சம்பவத்தன்று மதியம் இவர் தனக்கன்குளம் பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரன் பரிதாபமாக இறந்தார். திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News