உள்ளூர் செய்திகள்

வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை

Published On 2022-07-29 09:31 GMT   |   Update On 2022-07-29 09:31 GMT
  • வியாபாரி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
  • அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மதுரை

பழங்காநத்தம், பசும்பொன் நகர், ஜீவா தெருவை சேர்ந்தவர் கார்த்திக் குமார் (வயது 31). இவருக்கு மூளை நரம்பு வியாதி உள்ளது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் குமார் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வண்டியூர் சதாசிவம் நகர் புகழேந்தி தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 46). இவர் அனுமார் பட்டியில் இரும்பு கடை நடத்தினார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதன் காரணமாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக மனைவி சியாமளா கணவருடன் கோபித்துக் கொண்டு, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹரி கிருஷ்ணன் நேற்று இரும்பு கடையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News