உள்ளூர் செய்திகள்

திசையன்விளையில் மது விற்றவர் கைது

Published On 2022-06-13 09:14 GMT   |   Update On 2022-06-13 09:14 GMT
  • மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.
  • மதுபாட்டில் மற்றும் பணம் பறிமுதல்

திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ், ஏட்டு தங்கராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை திசையன்விளை பைபாஸ் சாலை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அரசு மதுபான கடையில் மதுபாட்டில்களை வாங்கி அதை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த தோப்புவிளையை சேர்ந்த ஜோசப் எழிலரசன் (வயது 45) என்பவரை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து மதுபாட்டில்களையும், மதுவிற்பனை செய்து வைத்து இருந்த ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News