உள்ளூர் செய்திகள்

பி.எம்.கிசான் நிதித்திட்டத்தில் நிலம், ஆதார், கே.ஒய்.சி. விவரங்களை 31-ந்தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்

Published On 2022-08-11 07:00 GMT   |   Update On 2022-08-11 07:00 GMT
  • பி.எம்.கிசான் வலைதளத்தில் நிலம், ஆதார், இ-கே.ஒய்.சியை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
  • வருகிற 31-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்த புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும்.

மேட்டூர்:

மேச்சேரி வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைத்து வேளாண் குடும்பங்களும் பயன்பெறும் வகையில் 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.6 ஆயிரம் என 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடி மாற்றம் மூலமாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று மத்திய அரசு தெரிவத்துள்ளது.

எனவே பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களது நில ஆவணங்களா பட்டா, சிட்டா மற்றும் ஆதார் போன்றவற்றை மேச்சேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து நிலம் தங்கள் பெயரில் இருப்பதை உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிடுப்பு நடைபெறுவதால் தகுதியான விவசாயிகள் அனைவரும் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து பி.எம்.கிசான் வலைதளத்தில் இ-கே.ஒய்.சியை பதிவேற்றம் செய்திட வேண்டும். எனவே விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையுடன் இ-சேவை மையத்தியோ அல்லது கிராம தபால் அலுவலர்களையோ அணுகி, தங்களது விரல் ரேகையினை பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வருகிற 31-ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்த புதுப்பித்தால் மட்டுமே ஊக்கத்தொகை தொடர்ந்து கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News